ஆத்மாவின் ராகங்கள்
நா. பார்த்தசாரதி
தலைப்பை பார்த்தவுடன் ஏனோ ஓர் ஈர்ப்பு உண்டாகி எடுத்து படிக்க ஆரம்பித்த நாவல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைக்களம். உண்மை சம்பவமும் கூட என்பது தனிச்சிறப்பு. நூலின் முதல் பகுதியில் புனைவு போல் தொடங்கும் நாவல் தனிநபரின் வரலாற்றுக் கதையாக மிளிரப் போவதாக பாவித்து விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக ஒலிப்பது கூடுதல் சிறப்பு.