அக்கா! அக்கா! இடி எங்கிருந்து வருது?
S. Jayaraman
சின்ன தம்பியின் விஷயதாகம் நிரம்பிய மனதில் எப்பொழுதும் பெரிய அக்காவிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகள் இருக்கும். அக்காவிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் இருக்கும் என்பதும் தம்பிக்கு தெரியும். ஏனென்றால் அக்காதான் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களாக படிக்கிறாரே!இந்த புத்தகத்தில் சின்ன தம்பிக்கு இடிமுழக்கம் எங்கிருந்து வருகிறது என்று சந்தேகம். சொர்க்கத்தையே நடுங்கவைக்கும் வண்ணம் வானத்தில் வாழும் கோபம் கொண்ட அரக்கனின் கர்ஜனைதான் இடிமுழக்கமோ என்பதில் தொடங்கி, அட்டகாசம் புரியும் பைக் வீரர்கள் மேகத்தில் கூடி செய்யும் சப்தம்தான் இடியோ என்று பலவித பதில்கள்.கடைசியில் அக்கா சரியான விடையை சொல்கிறார். குதூகலமூட்டும் இந்த புத்தகத்தை படித்து விடையை தெரிந்து கொள்ளும்முன் நீங்களே சொல்லுங்கள்: இடிமுழக்கம் எங்கிருந்து வருகிறது?