அம்முவின் நாய்க்குட்டி
N. Chokkan
அம்முவுக்கு நாய்க்குட்டி வளர்க்க ஆசை. ஆனால், அவளிடம் நாய்க்குட்டி இல்லை. ஆகவே, அவள் எல்லாரிடமும் தான் ஒரு நாய்க்குட்டி வளர்ப்பதாகப் பொய் சொன்னாள். அந்த நாய்க்குட்டியின் பெயர் சங்கர் என்றாள், அதற்கு வாழைப்பழம் பிடிக்கும் என்றாள்... இப்படி ஏதேதோ கற்பனைகளைச் சொன்னாள். இதையெல்லாம் கேட்ட அவளுடைய நண்பர்கள், அம்மு வீட்டுக்கு வந்து அந்த நாய்க்குட்டியைப் பார்க்க விரும்புகிறார்கள். இப்போது, அம்மு என்ன செய்வாள்?