பார்கவி லாபம் தருகிறாள்
நா. பார்த்தசாரதி
தொழில் தர்மமும், நேர்த்தியும், அந்தத் தொழிலுக்கே உண்டான சில நுணுக்கங்களையும் பின்பற்றினால், எப்படிப்பட்ட நஷ்டத்திலிருக்கும் தொழிலையும் லாபம் கொழிக்கச் செய்யலாம். இழுத்து மூடுமளவு நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவவடிவேலுவின் ஹோட்டல் பார்கவியை நஷ்டத்திலிருந்து மீட்க சந்திரஜித் குப்தா என்ற பிசினஸ் மருத்துவர் டெல்லியிலிருந்து குருபுரத்திற்கு வருகிறார். அனைவரின் கூட்டு முயற்சியால் பார்கவி நஷ்டத்திலிருந்து மீட்கப்பட்டு லாபம் தரும் ஹோட்டலாக மாறுவதே இக்கதை.