chunu matrum munu uraipani

சுன்னு மற்றும் முன்னு : உறைபனி !

சுனுவும் முனுவும் ஒரு உறைபனி குளிர்ந்த காலையில் எழுந்திருக்கிறார்கள். அவர்களுடைய சூடான ஆடைகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! ஆடைகள் எங்கே இருக்க முடியும்?

- Sridevi G

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பார் !

சூரியன் உதித்துவிட்டது.

பறவைகள் கூச்சலிடுகின்றன.

சிறுமிகள் விளையாட தயாராக உள்ளனர்.

சுன்னு சொன்னாள்,"பர்ர்ர்ர், என்ன குளிர்!"

முன்னு சொன்னாள்," ஆமாம்,நல்ல குளிர்!"

" என்னை குளிரிலிருந்து காபாற்றிக்கொள்ள நான் சற்று கனமான ஆடைகளை அணியப்போகிறேன்", என்றாள் சுன்னு.

என்னுடைய குல்லா  எங்கே?", சுன்னு திகைத்தாள்.

" நேற்று, இங்கே தான் இருந்தது. இன்று எங்கே சென்றது?"

" என்னுடைய வெப்பமான காலுறைகளை காணவில்லை!" என்று அழுதாள் முன்னு.

"என்னுடைய வெப்பமான காலுறைகள்  எங்கே?"

"என் கால்களில் நல்ல குளிர் ,அவை உறைந்துவிட்டன !"

"என்னுடையதும் ", முன்னு அவள் சகோதரியிடம் கூறினாள் .

"பர்ர்ர்ர் , நல்ல குளிர்!"

"நல்ல குளிர்!"

சிறுமிகள் நடுங்கினர்.

" நம்மால் என்னுடைய வெப்பமான குல்லா கண்டுபிடிக்க முடியவில்லை.

நம்மால் உன்னுடைய வெப்பமான காலுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை,

நம்மால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை " என்றால் சுன்னு.

"நம்முடைய துணிகள் அனைத்தும் எங்கிருக்கும் ?" என்று அதிசயிக்கிறாள்

முன்னு.

"இங்கே பார் என்னுடைய மேல்சட்டை"! என்றால் சுன்னு. "ஆனால் என் மீதமுள்ள துணி எங்கே?"

"சுன்னு, இங்கே பார்", முன்னு கத்தினாள்.

"இந்த ஓட்டையில் பார். இங்கே என்னுடைய பல  வெப்பமான காலுறைகள்.

அங்கே உன்னுடைய வெப்பமான குல்லா."

சுன்னு மற்றும் முன்னு ஓட்டையின் உள்ளே பார்த்தனர்.

அங்கே அவர்களின் காலுறை மற்றும் குல்லா மற்றும் பல வெப்பமூட்டும் பொருட்களை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்கள் விளையாடுவார்கள்.