kaarmugil kootangal

கார்முகில் கூட்டங்கள்!

சிறுவர்களுக்கு மழைக்குக் காரணமான கார்முகில்கள் பற்றி இந்தக் கதை கூறுகின்றது.

- Prathiba Prem

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மயில் அண்ணா,நத்தை தம்பி..

வானத்தை பாருங்க!

வானத்தை பாருங்க!

கார்முகில்கள் கூட்டம்

தெரியுதா?

ஆமாம்,எவ்வளவு அழகாக இருக்கிறது?

கார் முகில்கள் கூட்டத்தைக் கண்டால்

நான் மகிழ்ச்சியில் இறகுகளை

விரித்து நடனம் ஆடுவேன் !

அண்ணா !ஏன் முகில்கள் எல்லாம்

கருமை நிறத்தில் இருக்கிறது ?

ஓ !அதுவா ?முகில் கூட்டங்களில் நீர் நிறைந்து காணப்படுவதால்

அது கருமையாக உள்ளது.

கார் முகில்கள் கூட்டமாக இருந்தால்

அன்று மழை பெய்யலாம் ..

அட! மழை பெய்யுது வாங்க வீட்டுக்கு

போகலாம் ஆட்டம் போட்டபடியே ...

நீங்களும் வருகிறீர்களா?

மழையில் நனையலாம்!