kaatu pallikoodam

காட்டு பள்ளிக்கூடம்

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் இருக்குன்னு கேள்விப்பட்டு விலங்குகள் எல்லாம் கூஷிய கிளம்பின. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ...வாங்க"காட்டு பள்ளிக்கூடத்துக்கு "

- Prasanna kumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு அடர்ந்த காடு இருந்தது .

அது அடர்ந்தும் இருண்டும் இருந்தது.

எங்கும் பெரிய மரங்கள் நிறைந்திருந்தன .

அதற்குள் பாதைகளும் இருந்தன.

அந்த காட்டில் நிறைய மிருகங்களும் பறவைகளும் வசித்து வந்தன .

ஒருநாள் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின .

"நீ அத கேள்வி பட்டியா ?" - கிளி கேட்டது .

"ஆமாம் " - மான் சொன்னது

"என்ன...என்ன...என்ன ? "- பயந்த முயல் கேட்டது .

"நமது காட்டில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது "- மிங்கு குரங்கு சொல்லியது .

குண்டு யானை யோசித்தது "..ம்ம் ..?! "

நெடிய ஒட்டகச்சிவிங்கி குஷியானது .

நகரும் நத்தை சத்தமாக நவில்ந்தது " வாங்க சீக்கிரம் , எல்லாரும் அங்கு செல்வோம் "

கிளி முன்னே பறந்து சென்றது.

மிங்கு மரத்துக்கு மரம் தாவி சென்றது .

புரக்கா எனும் மலைப்பாம்பு வேகமாக ஊர்ந்து சென்றது .

"அங்கே பார் ...: - கத்தியது கிளி

.."உன்னால படிக்க முடியுமா ?" - என்றது கிளி .

தலைகீழாக தொங்கிய மிங்கு சொல்லியது ...

"எல்லாமே தலைகீழா எழுதி இருக்கே "

ஸ்ஸ் -னு பெருமூச்சு விட்ட மலைப்பாம்பு " இங்க ஒருத்தருக்கும் படிக்கச்

தெரியாதா ? " என்றது.

விரைவில் எல்லா நண்பர்களும் அங்கே கூடினர்

லம்பு மேல பாத்து சொல்லுச்சு "இங்க யாரும் இல்ல "

மிங்கு சொல்லுச்சு " இங்க யாரும் இல்ல "

கிளி "நல்லா பாருங்க ...ம்ம்..தேடுங்க ..தேடுங்க ..." என்றது .

குட்டி கரடி அறிவிச்சது

"இங்க ஒரு குட்டி ரூம் இருக்கு ..."

நத்தை சொல்லுச்சு " எனக்கு ஒரு ஊஞ்சல் கிடைச்சிருக்கு ..!"

முயல் சொல்லுச்சு - "இந்த பிளாக் எதுக்கு யூஸ் ஆவும் ?"

மிங்கு குரங்கு "அது என்னது ?"

மலைப்பாம்பு புரிய வச்சது " அநேகமா அது ஒரு பென்சிலா இருக்கலாம் "

யானையும் சிவிங்கியும் ஒரு ரூம பாத்துச்சு

அதுங்க எல்லாத்தையும் கூப்டு சொல்லுச்சு

"பாருங்க இங்க என்ன இருக்கு ன்னு ?"

எல்லாம் ஸ்கூல் பைய தூக்கிட்டு வந்துருச்சுங்க ...

"டீச்சர் ...டீச்சர் ...எங்க டீச்சர் எங்கன்னு   கத்த ஆரம்பிச்சுதுங்க .

ஆனா யாருக்குமே தெரியல .

அப்போ அதுக்கு ஒரு உறுமல் சத்தம் கேட்டது .

அப்புறம் ஒரு பெரிய சத்தம்.

இன்னும் ஒரு பெரிய உறுமல்

புர்கா -வும் மிங்கு வும் பயந்துடிச்சி.

கிளி போர்டு பின்னாடி பம்மிருச்சி.

"யாரு அது ..?"

மிங்கு " ஹப் " ன்னுச்சு

எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க .

எல்லாம் டீச்சர் வந்த திசையை கவனமா பாத்துட்டு .. ..அப்புறம் தங்களுக்குள்ள மாறி மாறி பாத்துகிச்சுங்க .

டீச்சர் போர்டு பக்கம் திரும்புனாங்க .

அவ்ளோதான் ...

"தவ்வு .."ன்னு கத்துச்சு குரங்கு ...

"ஓடு .." ன்னு கத்துச்சு கிளி ...

தம் ..தம்...யானை ஓடுது ...

எல்லாம் கத்துது " ஓடுங்க ...ஓடுங்க "

டீச்சர் திரும்பி பாக்கும்போது அங்க ஒருத்தரும் இல்ல