கொக்கரக்கோ சிக்கரக்கோ
சே சே சேவல் கண்களை நன்றாகத் தேய்த்துப் பார்த்தது. அதனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. வானத்திலிருந்து ஒரு பொரித்த முட்டை கீழே வந்துகொண்டிருந்தது. அந்த முட்டைக்கு சிலந்தியைப்போல் நான்கு கால்கள் இருந்தன. அது பச்சைப் புல்லில் அழகாக இறங்கி நின்றது.
“ஆ! இது என்ன கனவா, நனவா!” என்று வியந்தது சே சே. “இது என்ன அதிசயம்!” அந்தப் பொரித்த முட்டைக்குள்ளிருந்து ஒரு புத்திசாலிக் கோழியும், ஒரு அதிபுத்திசாலிக் கோழிக்குஞ்சும் வெளியில் வந்தன.