குறும்புப்பன்றி லலிதா
N. Chokkan
லலிதா, பானை செய்யும் கலைஞரான மினி சிங்கின் செல்லப்பன்றி. அவள் நிறையக் குறும்பு செய்வாள். ஆகவே, எப்போதும் வம்பில் மாட்டிக் கொள்வாள். ஒருநாள், மினி சிங்கின் அழகிய பானைகளெல்லாம் உடைந்து கிடந்தன. லலிதாதான் அவற்றை உடைத்துவிட்டாள் என்று அவர் நினைத்தார். அதன் பிறகு என்ன ஆனது? இந்தக் கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்! லலிதா கற்பனைக் கதாபாத்திரம் அல்ல. பூனாவில் ஒரு பானை செய்யும் கலைஞருடன் வசிக்கிற நிஜமான பன்றி!