arrow_back

மாறி மாறிப் பின்னும்

மாறி மாறிப் பின்னும்

ராஜம் கிருஷ்ணன்


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

அன்றாடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், கேட்டும் படித்தும் அறியும் செய்திகள் ஆகியவற்றின் தூண்டலிலேயே இந்தப் புதினம் உருவாகி இருக்கிறது. அந்நாள், ‘மிஸ் மேயோ’ என்ற பெண்மணி இந்திய நாட்டில் ஓர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டாள். இந்திய மக்கள் தன்னாட்சி செய்யத் தகுதியானவர்கள் அல்ல என்று தீர்ப்புக் கூறுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்ததன் பயனாகவே அந்தப் பெண்மணி அந்த ஆய்வை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த அம்மையார் ஓர் அறிக்கையும் கொடுத்தார். இந்தியப் பெண்களின் குடும்ப, சமூக நிலை அந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு, வெளிச்சமாக்கப்பட்டிருந்தது.