முதல் வீடு
S. Jayaraman
முன்னொரு காலத்தில் மக்கள் குகைகளில் வசித்தபோது, அருணாச்சலப் பிரதேசம் என்று இப்பொழுது அழைக்கப்படும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இரு சகோதரர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள முடிவு செய்தார்கள். அந்த பகுதியில் வசித்த விதவிதமான பிராணிகளைப்பற்றி பேசும் இந்த கிராமியக்கதை முதல் வீடு கட்டப்பட்டது எப்படி என்று நமக்கு சொல்கிறது.