ஒரு வெறுப்பின் மறுபுறம்
நா. பார்த்தசாரதி
என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த வெறுப்பு அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. அந்த வெறுப்பின் காரணத்தையோ மூலத்தையோ அவர் ஆராய்ந்ததில்லை.