பாழடைந்த பங்களா
அமரர் கல்கி
ரொம்பவும் தெரிந்த சிநேகிதர்கள் யாராவது என்னிடம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து "இதைக் கட்டாயம் விகடனில் போடச் சொல்லுங்கள்" என்று கூறும்போதெல்லாம் நான் மனத்திற்குள், "நாளைக்குப் பல்லாவரத்திற்குப் போக வேண்டியதுதான்" என்று சொல்லிக்கொள்வது வழக்கம்.