பணத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்!
Sandhya Jaichandren
‘ரூபாய், நாணய’த் தொடர் பணம் குறித்த பயனுள்ள பல விவரங்களைக் குழந்தைகளுக்குத் தருகிறது. அதன்மூலம், மாறிக்கொண்டே வரும் இந்த உலகில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது பணத்தை விவேகத்தோடு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவிசெய்கிறது. நாணயங்கள் எவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டன? மனிதர்கள் எவ்வாறு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், சேமிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்? போதுமான அளவு பணம் கையில் இல்லாத நிலையிலும், ஒரு குடும்பம் தான் விரும்பிய குளிர்சாதனப் பெட்டியை உடனே வாங்கிவிட இயலுமா? இவற்றையும் இன்னும் பலவற்றையும் அறிந்துகொள்ள, ‘ரூபாய், நாணய’த் தொடரின் நான்காவது புத்தகமான ‘பணத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்’ உங்களுக்கு உதவும்.