arrow_back

பட்டுப்பூச்சி

பட்டுப்பூச்சி

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

நாவல் என்ற வார்த்தைக்குப் புதுமை என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த நாவல் ஒரு புதுமை. கதாபாத்திரங்களைக் கொண்டு அவற்றை உருவாக்குகிற கதாசிரியனும் சேர்ந்து அக்கதையை வளர்க்கும் இந்தப் புதுமுறையைக் காண்டேகருடைய ‘கருகிய மொட்டு’ என்ற நாவலில் பார்த்திருக்கிறோம். அந்த நாவலின் முன்னுரையில் காண்டேகர் எழுதும் போது இந்தப் புதுமுறையைத் தாம் வேறு ஆங்கில நாவலாசிரியரிடம் இருந்து மேற்கொண்டதாகச் சொல்லுகிறார். தமிழிலும் ஒன்றிரண்டு நாவல்கள் இதே ரீதியில் வெளிவந்திருக்கின்றன. ‘பட்டுப்பூச்சி’ இந்த வகையில் இன்னும் அதிகப் புதுமைகளைக் கொண்டது.