புதிய கரோனா வைரஸ்: பாதுகாப்பாக இருக்கலாம்
புதிய கரோனா வைரஸும் கோவிட்-19ம்
“கரோனா வைரஸ்கள் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் குடும்பம். பல கரோனா வைரஸ் வகைகள் மனிதர்களிடம் சுவாசத் தொற்று சார்ந்த சாதாரண சளிப்பிடித்தல் தொடங்கி தீவிரமான நோய்கள்வரை ஏற்படுத்துகின்றன. கோவிட்-19, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு கரோனா வைரஸால் உருவாகும் நோய்.” - உலக சுகாதார நிறுவனம் (WHO)
பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க
கோவிட்-19 நோய் பலருடைய வாழ்க்கையை பாதித்துவருகிறது. அதேநேரம் நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்களும் உதவுகிறார்கள். இது இக்கட்டான நேரம். ஆனால், இதை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்கொள்வோம். நம் உடல்நலத்தை எப்படி கவனித்துக்கொள்வது என்றும், மற்றவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் சிறந்த நடைமுறைகளை நம்முடைய நெருக்கமான நண்பர்கள் சிலர் எடுத்துச்சொல்கிறார்கள்.
விழிப்புடன் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம்.
சந்தேகங்களை உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) கேட்கலாம் கூடுதல் தகவல்களுக்கு: https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019 நன்றி: அனிர்பான் மகாபத்ரா, மரு. என்.எஸ். பிரசாந்த், சாம்பவி, மரு. தான்யா சேஷாத்ரி.