ராஜ ஊர்வலம்
Mahalakshmi
பார்வதியும் அவளுடைய சகோதரன் இலக்குமனனும் பாடலிபுத்திர நகரில் வசிக்கிறார்கள் அவர்கள் அருகாமையிலுள்ள புத்த விஹாரத்திற்குக் குடம், சட்டி போன்ற மட்பாண்டங்களைக் கொடுக்கச் சென்றபோது, அங்கு ஒரு சுவாரசியமான மனிதரைக் கண்டு நல்ல நட்பு கொண்டனர். அந்நபர் அவர்களிடம் தான் ஓர் ஓய்வுபெற்ற போர்வீரர் என்றும் பேரரசர் அசோகரின் அரண்மனையில் வேலை செய்வதாகவும், மாமன்னரைப் பார்க்க அவ்விருவர் கொண்டிருந்த அவா சீக்கிரத்தில் நிறைவேறும் என்றும் கூறினார். பிறகு ஒருநாள், ராஜ ஊர்வலம் அவர்கள் வீட்டைத் தாண்டிச் சென்றபோது, அக்குழந்தைகளுக்கு ஒரு வியப்புமிக்க நிகழ்ச்சி காத்திருந்தது. அந்த வியப்புமிக்க சம்பவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, மௌரிய காலத்தில் பின்னப்பட்டுள்ள இந்த அருமையான கதையைப் படியுங்கள்!