ரசா ராஜாவைச் சந்திக்கிறான்
Mahalakshmi
ரசாவின் தந்தை ரஹ்மத் கான் முகலாய பேரரசர் அக்பரின் ஆஸ்தான தையற்காரர். ஆடைகளின் விஷயத்தில் கருத்தாக இருக்கும் பேரரசர் அக்பர் ரஹ்மத்திடம் கோடைகாலத்திற்கான உடுப்புகளைக் கேட்டிருந்தார். ரசா புது ஆடைகளைக் கொடுப்பதற்காகத் தன் தந்தையுடன் அரண்மனைக்குச் சென்றான். அரண்மனையில் பேரரசருக்குத் தயாரித்திருந்த ஆடைகளில் அவ்வளவு திருப்தி இல்லை என்று உணர்ந்து, துரிதமாக ஒரு கெட்டிக்காரத்தனமான தீர்வை அளிக்கிறான். ரசா எப்படி சமாளிக்கிறான் என்று அறிய, முகலாய இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட இந்த அருமையான கதையைப் படியுங்கள்.