சுதிப்தா சென்குப்தா – பாறைகளை வாசிப்பவர்
Subhashini Annamalai
சுதிப்தாவுக்கு மலையேறுவது என்றால் மிகவும் பிடிக்கும். புத்தகங்களை வாசிப்பதைப் போல அவர் பாறைகளையும் வாசிப்பார். அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் இந்திய, பெண் நிலவியலாளரான சுதிப்தா, அங்குள்ள ஸ்கர்மேக்கர் குன்றுகளில் ஏறி அதன் பாறைகள் சொல்லும் கதைகளைக் கண்டறிந்திருக்கிறார்.