arrow_back

சுதிப்தா சென்குப்தா – பாறைகளை வாசிப்பவர்

சுதிப்தா, பாபாவுடன் கணக்குப் பாடம் படிக்க உட்காரும்போது, அவளது மனம் மலைகளை நோக்கி சஞ்சரிக்கும்.

பெரிய பாறைகளின் மீது ஏறுவதையும் பனிபடர்ந்த மலை முகடுகளைக் கடப்பதையும் கற்பனை செய்வாள்.

மலையேற்ற வல்லுநராக ஆவதே அவளுடைய கனவாக இருந்தது.