திருவிழாவும் கணக்கும்
லீலுவோடு சேர்த்து நான்காம் வகுப்பில் மொத்தம் 36 மாணவர்கள் இருந்தனர். அத்தனை பேரும் திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள். “பொம்மை ரயிலில் யார் எல்லாம் போறீங்க, கை தூக்குங்க!” என்று ஆசிரியர் கேட்கிறார். “நான், சார்... நான்!” என்று அனைவரும் கத்துகிறார்கள்.