arrow_back

வரையலாம், விளையாடலாம் வா!

ஜீனு அவளுடைய கோடை விடுமுறையை தனது பாட்டியின் வீட்டில் கழிக்கிறாள். அங்கே அவளுக்கு நண்பர்கள் இல்லை. அதனால் அவளுக்குப் பொழுதே போகவில்லை.

“அஜ்ஜி, என்னுடன் விளையாட வா!” என்றாள் அவள்.

“சீக்கிரம் போய் ஒரு பலப்பத்தைக் கொண்டு வா. நாம் ஒரு விளையாட்டு விளையாடலாம்” என்றார் அஜ்ஜி.