வீடு திரும்பிய கப்பல்
Mahalakshmi
பல்லவர் காலத்தில் பசவாவும் அவனுடைய சகோதரி சுந்தரியும், துறைமுக நகரமாகிய மாமல்லபுரத்தில் வசித்தனர். மாலுமியாக காம்போஜா சென்ற தங்கள் தந்தை கடல் பயணத்திலிருந்து இன்னமும் திரும்பி வராத காரணம் தெரியாமல் கவலையுடன் இருந்தார்கள். மாமல்லபுரத்து வியாபாரி ஒருவரின் மனைவி அவர்களுக்கு துறைமுகத்திற்குச் சென்று அவர்களுடைய தந்தையின் கப்பலைப் பற்றி விவரம் அறியுமாறு யோசனை சொன்னார். அவர்களும் சென்றனர். அங்கு தங்கள் மொழியறியாத வெளிநாட்டு மாலுமிகளின் மத்தியில் தாங்கள் இருப்பதை உணர்ந்தனர். அவர்களிடம் எந்த முறையில் தொடர்புகொண்டு தங்கள் தந்தையுடைய கப்பலைப் பற்றிய சேதியை அறிந்து கொண்டனர். எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த வேடிக்கையான சிறுகதையை படியுங்கள்.