வேரூன்றிவிட்டது சிப்கோ
S. Jayaraman
மலைகளில் நடக்கும் இந்த கதை, வீரமும், விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைச் சொல்லுகிறது. போட்டியா இனத்தைச் சேர்ந்த டிச்சி என்னும் சிறுமி அவள் நேசிக்கும் மரங்களைக் காப்பாற்ற சிப்கோ இயக்கத்தில் பங்கேற்கிறாள். மரங்கள்தான் எல்லா வளங்களையும் தருகிறது என்பதை உணர்ந்தவர்கள் அந்த கிராம மனிதர்கள். அலக்நந்தா பாயும் இமயமலைப் பகுதியில் மிக விரைவாக காடுகள் அழிக்கப் பட்டதால் 1970 ல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மரங்களை அணைத்துக் கொண்டு அவைகளைக் காக்கும் ஒரு இயக்கம் இதனால் பிறந்தது. டிச்சியின் பார்வையில் சொல்லப்படும் இதயத்தைத் தொடும் இந்தக் கதையைப் படித்து எல்லோரும் இணைந்தால் எல்லாம் முடியும் என்பதை உணருங்கள்.